திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு :

திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு :
Updated on
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் கூடுதலான மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள், மாநகர போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்துக்குள் வரும் வாகனங்கள், பயணிகள் கொண்டு வரும் உடமைகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்திய பிறகே, பயணிகள் டெர்மினலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். விமானநிலைய பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in