Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

குண்டர் சட்டத்தில் 8 பேர் கைது :

திருச்சி/ திருவாரூர்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஜெயராஜ்(45). கரூர் புறவழிச் சாலையில் அண்ணாமலை நகரில் உள்ள நகைக் கடையில் வேலை செய்து வந்த இவர், மே 9-ம் தேதி சென்னையிலிருந்து 1.6 கிலோ புதிய நகைகளை வாங்கிக் கொண்டு திருச்சி வரும் வழியில், ரங்கம் மாம்பழச் சாலை ச.பிரசாந்த்(26), கிழக்குறிச்சி பொ.பிரசாந்த்(26), அழகிய மணவாளம் அரவிந்த் (23), பிரவீன்ராஜ்(20) ஆகியோர் மார்ட்டின் ஜெயராஜை கொலை செய்து, தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x