Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

நெல்லை மாநகரில் - கரோனா தொற்று புதிதாக இல்லை :

திருநெல்வேலி மாநகரில் கரோனா தொற்று நேற்று புதிதாக கண்டறியப்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 48,173 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதில் 47,487 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. அதேநேரத்தில் வள்ளியூர் வட்டாரத்தில் 4 பேர், ராதாபுரம் வட்டாரத்தில் 3 பேர், சேரன்மகாதேவி, நாங்குநேரி வட்டாரங்களில் தலா ஒருவர் என்று 9 பேருக்கு நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 84 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 6,980 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4,020 கோவாக்சின் தடுப்பூசிகளும் தடுப்பூசி மையங்களுக்கு நேற்று பிரித்து அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த அளவுக்கே தடுப்பூசி செலுத்த மக்கள் வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x