Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

மேலும் 7 கரித்தொட்டி ஆலைகளுக்கு ‘சீல்' :

காங்கயம் அருகே கரித்தொட்டி ஆலையில் குழிகளை மூடி நேற்று ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

திருப்பூர்: காங்கயம் அருகே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 6 கரித்தொட்டி ஆலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் மூடி ‘சீல்’ வைத்தநிலையில், நேற்று மேலும் 7 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்துவதாகக் கூறி, காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியில் உள்ள 4 கரித்தொட்டி ஆலைகளில் மொத்தம் 40 குழிகள், ஊதியூர் அருகே வட்டமலை-அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள ஆலையில் 9 குழிகள், முதலிபாளையம்-ஊதியூர் பகுதியில் உள்ள ஆலையில் 6 குழிகள், நிழலி-ஊதியூரில் உள்ள ஆலையில் 4 குழிகள் என மொத்தம் 7 கரித்தொட்டி ஆலைகளில் செயல்பட்டு வந்த 59 கரித்தொட்டிக் குழிகள் மூடப்பட்டன.

இந்த நடவடிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதி ராகவன், உதவிப் பொறியாளர் சத்யன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x