Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

தேவாலய நிர்வாகிகள் ஆக்கிரமித்த : அரசு நிலத்தை மீட்கக்கோரி பாஜக மனு :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் தேவாலய நிர்வாகிகள் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் முத்துலிங்கம் தலைமையிலான அக்கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இளைஞரணி மாவட்ட துணை தலைவர் முத்துலிங்கம் கூறியதாவது:

ஏற்கெனவே பரமக்குடி வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தோம். வட்டாட்சியர் தலைமையில் அந்த இடத்தை ஆய்வு செய்து, அரசு நிலம் மூன்றரை ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி இருப்பது தெரிய வநத்து. அதை மீட்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x