Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

கொலை வழக்கில் ஒருவருக்கு : 10 ஆண்டு சிறை :

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி (32). 2014-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் (42) என்பவர் வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இருவருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்படவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரன், காமாட்சியை குத்தினார். இதில் அதே இடத்தில் காமாட்சி உயிரிழந்தார். விளாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய் தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x