Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

சேலம் மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா புத்துணர்வு பயிற்சி முகாம் :

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் யோகா இயற்கை மருத்துவத்துறை மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா புத்துணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமை, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பணியாளர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவ அலுவலர் மருத்துவர். ஏ.எம்.சுதாகர், பயிற்சி அளித்தார்.

முகாமில், சுவாசப் பயிற்சி, பிரணயாமம், ஆசனங்கள் மற்றும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பயிற்சியில் 28 பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 நாட்களுக்கு பயிற்சி நடக்கிறது.

முகாமில், மாநகர நல அலுவலர் கே.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x