மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் எஸ்.அகஸ்டின், பன்னீர் செல்வம், மாரிமுத்து, மேற்பார்வை பொறி யாளர் அம்பிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற மின்வாரிய தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in