Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு :

திருப்பத்தூர் 36-வது வார்டு சாமியார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (55) தையல் தொழிலாளி. இவர், தனது மனைவி சாந்தி(50) என்பவருடன் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.35 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகரைச் சேர்ந்தவர் ஜலந்திரன் (41). இவர், சென்னை குரோம் பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (36) தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒட்டப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அன்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x