Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

கள்ளக்குறி்ச்சி, கடலூர், விழுப்புரத்தில் 133 பேருக்கு கரோனா :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 29,404 பேருக்குதொற்று ஏற்பட்டுள்ளது. மாவட் டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தநிலையில், இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் 44,100 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இது வரை 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் 60,987 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 63 பேர் உட்பட 59,454 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிர் இழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 818 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x