Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM

போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது :

கரூர்

கரூர் அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கே.பி.தாளியாபட் டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், வள்ளி தம்பதியின் மகன் ராஜேந்திரன்(19). இவருக்கும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமிக்கும் தாந்தோணிமலை பெருமாள் கோயிலில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை வட்டார சமூக நல அலுவலர் சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீஸார், ராஜேந்திரன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x