பொதுத்துறை நிறுவனங்களை - தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய தொழிற்சங்கத்தினர் பிரச்சாரம் :

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடக்கோரி திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடக்கோரி திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடக்கோரி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்க சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்கள் மற்றும் மோட்டார் வாகன சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, பனை-தென்னை தொழிலாளர் சங்க நிர்வாகி ஆர்.குப்புசாமி, விசைத்தறி சங்க பொறுப்பாளர் ஆர்.ரமேஷ், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் சி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in