விபத்தில் இருவர் உயிரிழப்பு :

விபத்தில் இருவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த நாச்சியார்பேட்டை காலனித்தெருவைச் சேர்ந்த கொத்தனார்கள் ஜெயபால்(35), கருப்பையன்(35).

இருவரும் நேற்று முன்தினம் ஆதிச்சனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையோர தென்னை மரத்தில் மோதினர். அதில் ஜெயபால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பையன் நேற்று உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in