Published : 08 Aug 2021 03:19 AM
Last Updated : 08 Aug 2021 03:19 AM

தடுப்பு காவல் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது : தி.மலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மாட்டுப்பட்டு தெருவில் வசிப்பவர் நாகப்பன் மனைவி ருக்மணி(54) மற்றும் செங்கம் வட்டம் புதுப்பாளையம் அடுத்த வீரணந்தல் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் பாலு மகன் சந்தோஷ்ராஜ்(32). இவர்கள் இருவரும் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போளூர் காவல் துறையினர் மற்றும் செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களது சமூக விரோத செயலை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில், ஓராண்டு தடுப்பு காவலில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ருக்மணி மற்றும் சந்தோஷ்ராஜ் ஆகியோர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x