Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM

கரோனா விழிப்புணர்வு போஸ்டர்களை ஓட்டல்களில் வைக்க ஆட்சியர் அறிவுறுத்தல் :

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கரோனா விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் கே.சி.அருண் முன்னிலை வகித்தார்.

கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் சோப்பினால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய போஸ்டரை ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார்.

மேலும், இவற்றை உணவு விடுதிகளில் ஒட்டுவதுடன், வாடிக்கையாளர்கள் இவற்றை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட உணவு விடுதி சங்க தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x