Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

தி.மலை கோயில்களில் தரிசனத்துக்கு தடை நீட்டிப்பு :

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வரும் 8-ம் தேதி வரை சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அனைத்து கோயில்களிலும் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை வரும் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்துக்கு தடை இருக்கும் காலங்களில் ஆகம விதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்களை அர்ச்சகர்கள், கோயில் நிர்0வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x