தேர்வு பணிக்கு வந்த 2 போலீஸார் விபத்தில் காயம் :

தேர்வு பணிக்கு வந்த 2 போலீஸார் விபத்தில் காயம் :
Updated on
1 min read

போலீஸ் தேர்வு பணிக்கு ராமநாதபுரம் வந்த சிவகங்கை மாவட்ட காவலர்கள் 2 பேர் விபத்தில் காமயடைந்தனர்.

போலீஸ் தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடல் தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இங்கு பாது காப்பு பணிகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காவலர்கள் ஜெயபால் (31), மாணிக்கவேல்(35) ஆகியோர் இருசக்கர வாக னத்தில் ராமநாதபுரத்துக்கு நேற்று அதிகாலை வந்தனர். அவர்கள் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கு அருகே வந்தபோது நாய் குறுக்கிட்டதால் வாகனம் கவிழ்ந்தது. இதில் இருவரும் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட னர். கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in