Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

உலக தாய்ப்பால் வார கருத்தரங்கம் :

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசியது: பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளையும் தரலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாயின் உடல் நலம் காக்கப்படும். குறிப்பாக, தாய்ப்பால் ஊட்டுவது குறித்து மக்களிடையே பொது நலச் சங்கங்கள், மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x