மருமகளைக் கொல்ல முயற்சி கடையத்தில் முதியவர் கைது :

மருமகளைக் கொல்ல முயற்சி கடையத்தில் முதியவர் கைது :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கீழக் கடையம் குமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (74). இவரது மனைவி இறந்துவிட்டார். செந்தில்குமார் என்ற மகனும், புவனேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். இதில், புவனேஸ்வரி திருமணமாகி மருதமுத்தூரில் வசித்து வருகிறார். செந்தில்குமார் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

செந்தில்குமார் மனைவி ஷா (43) தனது நான்கு பிள்ளை களுடன் மாமனார் சுப்பிரமணியன் வீட்டில் வசித்து வருகிறார். ஷா கூலி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளையும், மாமனாரை யும் கவனித்து வந்தார். கடந்த ஓராண்டாக ஷா தனது மாமனாருக்கு சரியாக உணவு கொடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், கத்தியால் ஷா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் காய மடைந்த ஷா தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, கடையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in