Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

கிராம சபை கூட்டம் நடத்த மநீம மனு :

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்டச் செயலர் காளிதாஸ், மத்திய மாவட்ட நற்பணி அணிச் செயலர் நாகரா ஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். இதில் முன் வைக்க வேண்டிய வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பார்வைக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.

தேனி

இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செய லாளர் எம்ஜி.அய்யப்பன் தலைமையில் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் அன்பு, மாவட்ட துணைச் செயலாளர் முகமது செல்லப்பா, தேனி நகரச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமசபைக் கூட்டத்தை முறையாக அறிவித்து நடத்த வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x