Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

திண்டுக்கல் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை :

திண்டுக்கல் மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பொறியி யல் பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத் தினர்.

திண்டுக்கல் மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதன் அடிப்படையில் நேற்று பிற்பகல் மாநகராட்சி பொறி யியல் பிரிவில் டி.எஸ்.பி நாக ராஜன் தலைமையில் இன்ஸ்பெக் டர்கள் சுந்தர்ராஜன், ரூபா மற் றும் போலீஸார் சோதனை நடத்தி ஆவணங்களைச் சரி பார்த்தனர். பணம் ஏதும் கைப் பற்றப்படவில்லை. அலுவலர் களிடமும் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x