Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

நாமக்கல், திருச்செங்கோட்டில் - கரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி :

நாமக்கல்லில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். அருகில் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ், எம்எல்ஏ பெ. ராமலிங்கம்.

நாமக்கல்

கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நாமக்கல்லில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

பேரணியில் முகக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து முழக்கமிடப்பட்டது. முன்னதாக கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.சோமசுந்தரம், நகராட்சி ஆணையர் பி.பொன்னம்பலம், தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் பெ.ரங்கநாதன், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கோட்டாட்சியர் இளவரசி தொடங்கி வைத்தார். பேரணியின்போது கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் முழக்கமிடப்பட்டன. திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x