திருச்சியில் விரைவில் தேசிய கையுந்துப்பந்து போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிர்வாகிகள்.
திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிர்வாகிகள்.
Updated on
1 min read

திருச்சியில் விரைவில் தேசிய கையுந்துப்பந்து போட்டி நடத்தப் படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்தார்.

திருச்சி மாவட்ட கையுந்துப் பந்து கழகத்தின் சார்பில் அக்கழ கத்தின் தலைமைப் புரவலரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரு மான அன்பில் மகேஸ் பொய்யா மொழிக்கு கடந்த 28-ம் தேதி செயின்ட் ஜோசப் கல்லூரி வளா கத்தில் பாராட்டு விழா நடத்தப் பட்டது. திருச்சி மாவட்ட கையுந் துப்பந்து கழகத் தலைவர் தங்க பிச்சையப்பா தலைமை வகித் தார். செயலாளர் எஸ்.கோவிந் தராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும் போது, ‘திருச்சி மாவட்டத்தில் கையுந்துப்பந்து விளையாட்டு மட்டுமின்றி அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அவற்றின் வளர்ச்சிக்காக விளையாட்டுத் துறை அமைச்சருடன் கலந்தா லோசித்து உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். மிக விரைவில் திருச்சியில் தேசிய அளவிலான கையுந்துப்பந்து போட்டிகள் நடத்தப்படும்' என்றார்.

கையுந்துப்பந்து கழக நிர்வாகி கள், விளையாட்டு வீரர்கள், உடற் கல்வி இயக்குநர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in