மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம் :

மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம் :
Updated on
1 min read

தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ‘மீன்வளர்ப்பினை விரிவுபடுத்த மானியம் வழங்கும் திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது.

பண்ணைக்குட்டை அமைக்க 50 சதவீத மானியமும் (ரூ.3.50 லட்சம்), செயல்பாட்டு செலவினத்துக்கு உள்ளீட்டு மானியமாக 40 சதவீதம் (ரூ.60 ஆயிரம்) வழங்கப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை வளாகம், தூத்துக்குடி. தொலை பேசி எண்: 0461-2320458 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in