Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

சாராயம் விற்ற 4 பேர் கைது :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறை யினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதேபகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி (40) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. அதன்பேரில், காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தில் கிராமிய காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ரேஷன் கடை பின்புறம் கொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராம்குமார்(39) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், செங்குன்றம் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அதேபகுதியைச் சேர்ந்த பார்வதி (44) என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி சுற்று வட்டாரப்பகுதிகளில் எஸ்பி தனிப்படை காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோணாமேடு பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த அதேபகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(34) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x