Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

கனமழையால் பாதிக்கப்படும் - மக்களை தங்க வைக்க 11 நிவாரண முகாம்கள் : ஆரணி கோட்டாட்சியர் கவிதா தகவல்

ஆரணியில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசும் கோட்டாட்சியர் கவிதா.

ஆரணி

கனமழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்புடன் தங்க வைக்க ஆரணி வட்டத்தில் 11 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளது என கோட்டாட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கோட்டாட்சியர் கவிதா பேசும்போது, “தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொள்வதை தடுக்க மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மற்றும் ஜென ரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆரணி வட்டத்தில் மழையால் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதி களாக 11 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. மழையால் பாதிக்கப் படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 11 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளை வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

கமண்டல நாகநதி மற்றும் செய்யாற்றில் இருந்து ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் எளிதாக செல்லும் வகையில், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்பு களை அகற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இதில், காவல் துணை கண் காணிப்பாளர் கோட்டீஸ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x