Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

ஐ.டி.ஐ. சேர்க்கை ஆக. 4 வரை நீட்டிப்பு :

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள், விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் கடந்த 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும், தற்போதுதான் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு அருப்புக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.யை 04566-225800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x