Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை :

திருச்சி

திருச்சி ராம்ஜிநகர் அருகேயுள்ள தெற்கு பாகனூரைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவரது சகோதரர் ராஜேந்திரன்(42). கடந்த 26.9.2016 அன்று இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட சொத்துப் தகராறில் ராஜேந்திரன் அரிவாளால் வெட்டியதில் செல்வத்தின் மனைவி முத்துலட்சுமி காயமடைந்தார். இதுதொடர்பாக ராஜேந்திரனை ராம்ஜிநகர் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வத்சன், குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு பிரிவு 326-ன் கீழ் 7 ஆண்டுகளும், 307-ன் கீழ் 7 ஆண்டுகளும், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டும் சிறை தண்டனை, ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x