Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

தாழையூத்து ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் முக்கிய பிரமுகர் கைது :

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரானை போலீஸார் கைது செய்தனர்.

வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் கண்ணன் (33). இவர், கடந்த 12-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ், நல்லதுரை, சங்கிலி பூதத்தான், குரு சச்சின், இசக்கிமுத்து, முத்து கிருஷ்ணன், சதீஷ் ராஜா, அதிசயபாண்டி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x