Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM

வானூர் அருகே - கல்குவாரியில் வெடிமருந்துகள் பறிமுதல் :

வானூர் அருகே கல்குவாரி யில் பதுக்கி வைத்திருந்த வெடிமருந் துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வானூரை அடுத்த தொள்ளாமூரில் உள்ள ஒரு கல்குவாரியில் வானூர் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 700 டெட்ட னேட்டர்கள், 1,800 சிலரிகள் ஆகிய வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் இந்த வெடி மருந்துகளை கல் குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள வெடிமருந்து குடோனில் இருந்து அனுமதியின்றி வாங்கி வந்து பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வெடிமருந்துகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x