Published : 31 Jul 2021 03:15 AM
Last Updated : 31 Jul 2021 03:15 AM

நாமக்கல்லில் 3-ம் தேதி - காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 3-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 3-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்தபடி குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கலாம்.

விவசாயிகள், சமூக விலகலை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் காணொலிக் காட்சி மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். முன்னதாக அன்று காலை 10 மணிக்குள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x