Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் : மாமூல் கேட்டு வியாபாரியை கத்தியால் வெட்டிய இருவர் கைது :

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியை மாமூல் கேட்டு கத்தியால் வெட்டிய ரவுடி கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (40). இவர், நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர், மார்க்கெட்டில் நேற்று முன்தினம் காலை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அங்கு வந்த ரவுடிக் கும்பல், பாலுவிடம் மாமுல் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால் அவர்கள் கத்தியால் பாலுவின் தலையை வெட்டினர். இதில், படுகாயம் அடைந்த பாலுவை வியாபாரிகள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக, வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும், நேதாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில், வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த அறுப்பு ராமச்சந்திரன் (35), ரவி (40) ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மார்க்கெட்டில் மாமூல் கேட்கும் ரவுடிகள் குறித்த விவரங்களையும் காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x