Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

சிறைச்சாலைகளில் உள்ள - குற்றவாளிகளை நோயாளிகளாக கருதி நல்வழிப்படுத்த வேண்டும் : புதுடெல்லி சிறைத்துறை தலைவர் சந்தீப் கோயல் கருத்து

மகாத்மா காந்தி சொன்னது போல குற்றம் என்பது ஒருவகை நோய். எனவே, குற்றவாளிகளை நோயாளிகளாக கருதி அவர்களுக்கு சிறை அதிகாரிகள் மருத்துவர்களாக செயல்பட்டு நல்வழிப்படுத்த வேண்டும் என புதுடெல்லி சிறைத்துறை தலைவர் சந்தீப் கோயல் தெரிவித்தார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆப்கா மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, உதவி கண்காணிப்பாளர்கள், துணை ஜெயிலர்கள், உதவி ஜெயிலர்களுக்கான 9 மாதங்கள் அடிப்படை பயிற்சி கொண்ட 26-வது பிரிவு பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. வேலூர் மத்திய சிறை கவாத்து பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுடெல்லி சிறைத்துறை தலைவர் சந்திப் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

புதுடெல்லி திஹார் சிறையைச் சேர்ந்த 53 உதவி கண்காணிப் பாளர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 துணை ஜெயிலர்கள், தமிழ கத்தைச் சேர்ந்த 6 உதவி ஜெயிலர்கள், கேரளாவைச் சேர்ந்த 3 உதவி கண்காணிப்பாளர்கள் என 4 பெண்கள் உட்பட 65 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். அடிப்படை பயிற்சியின்போது சிறை நிர்வாகம், குற்றவியல், சமூகவியல், சமூகப் பணி, உளவியல், சிறப்பு சட்டம், மனித உரிமைகள், சிறை மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கான பதக்கங்களை புதுடெல்லி சிறைத்துறை தலைவர் சந்திப் கோயல் வழங்கிப் பாராட்டினார்.

முன்னதாக பயிற்சி வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு அவர் பேசும்போது, ‘‘சிறை நிர்வாகப் பணி என்பது மிகவும் கடினமானது. ஏழைகள், ஆதர வற்றோர், கொடும் குற்றவாளிகள் பலர் சிறையில் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பணிக்கு தொழில் முறையில் பயிற்சி பெறுவது முக்கியம். முதல் முறை யாக புதுடெல்லியில் இருந்து சிறை அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

நீங்கள் இங்கே கற்றதைபுதுடெல்லி சிறையில் செயல்படுத்த வேண்டும்.

நெல்சன் மண்டேலா கூறியது போல் ஒரு சிறைச்சாலை யை பார்த்தால் அந்த நாட்டின் நாகரீ கத்தை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் உங்கள் சிறைச் சாலையை சரியாக நடத்த வேண்டும். நாம் அனைவரும் சிறை கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். சில நேரங்களில் சிறையில் வசதிகள் குறைவாக இருக்கக்கூடும்.

இந்த குறைவான வசதியை கொண்டு நம்மால் முடிந்த அளவுக்கு முயன்று சிறை கைதி களை நல்வழிப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி சொன்னது போல குற்றம் என்பது ஒருவகை நோய். குற்றவாளிகளை நோயாளிகளாக கருத வேண்டும். சிறை அதிகாரிகள் சமூக மருத்துவர்களாக செயல்பட்டு சிறை கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x