விழுப்புரத்தில் கரோனா விழிப்புணர்வு கூட்டம் :

விழுப்புரத்தில் கரோனா விழிப்புணர்வு கூட்டம் :
Updated on
1 min read

விழுப்புரத்தில் கரோனா 3-ம் அலையை தடுக்கும் வகையில் அனைத்து நுகர்வோர், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பொது நலச்சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கினார்.

மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் சண்முகக்கனி கலந்துகொண்டு கரோனா தடுப்பு குறித்தும், தடுப்பூசியின் பயன்கள் குறித்து பேசினார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் டிஎஸ்பி பழனிச்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுடைநம்பி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகந்தன், வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in