திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஒருவர் கொலை: 3 பேர் கைது :

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஒருவர் கொலை: 3 பேர் கைது :
Updated on
1 min read

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அடை யாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் துணி மூட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலையில் அப்பகுதிக்கு வந்த 3 இளைஞர்கள், துணி மூட்டையில் பணம் இருப்பதாக நினைத்து அதை எடுக்க முயன்றுள்ளனர். அந்த நபர் துணி மூட்டையை விடாமல் பிடித்துக் கொண்டார். அவரை மூவரும் சேர்ந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சதீஷ்குமார் (31), ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த மகேஷ் (26), பழனியைச் சேர்ந்த ஈஸ்வரபாண்டியன்(30) ஆகியோரை திண் டுக்கல் நகர் வடக்கு போலீஸார் கைது செய்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in