தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் உ.கண்ணன், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் சுடலை ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in