மூன்றாம் பாலினத்தவர் தடுப்பூசி செலுத்த அறிவுரை :

மூன்றாம் பாலினத்தவர் தடுப்பூசி செலுத்த அறிவுரை :
Updated on
1 min read

மூன்றாம் பாலினத்தவருக்கான ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டைகள் மற்றும் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் விஜயகுமார் தலைமை வகித்தார். சமூக நல அலுவலர் புஷ்பலதா முன்னிலை வகித்தார்.

ஆட்சியர் ச.விசாகன் மூன் றாம் பாலினத்தவருக்கு உதவி களை வழங்கிப் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் 222 பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தகுதியானோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், வீட்டுமனைப் பட்டா உள்ளோருக்கு இலவச வீடு கட்டித் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். முகாமில் பங்கேற்றோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மருத்துவ அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in