Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

கமுதி அருகே விபத்தில் தொழிலாளி மரணம் :

கமுதி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதியதில் கூலித் தொழிலாளி உயி ரிழந்தார்.

கமுதி அருகே புதுப் பட்டியைச் சேர்ந்த காளிச் சாமி(18), காளீஸ்வரன் (18), முத்து வழிவிட்டான் (20), மாரிச்சாமி (20) ஆகிய 4 பேரும் கமுதியில் உள்ள கடைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும், புதுப்பட்டிக்கு மாரிசாமியின் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பினர். அதே நேரம் கமுதி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த சாமுவேல் (55) கமுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். குடிக்கினியான் விலக்கு சாலை அருகே 2 பைக்குகளும் மோதின. படுகாயமடைந்த 5 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சாமுவேல் உயிரிழந்தார்.

இதுகுறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x