ரங்கம் கோயில் உண்டியலில் ரூ.44.93 லட்சம் காணிக்கை :

ரங்கம் கோயில் உண்டியலில் ரூ.44.93 லட்சம் காணிக்கை :
Updated on
1 min read

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரொக்கமாக ரூ.44,93,020 வரப் பெற்றிருந்தது. மேலும், 94 கிராம் தங்கம், 817 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன், ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில், உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி (ரங்கம்), செ.மாரியப்பன் (திருவானைக்காவல்), மேலாளர் உமா மகேஸ்வரி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in