பாலியல் தொல்லை: டான்ஸ் மாஸ்டருக்கு 20 ஆண்டுகள் சிறை :

பாலியல் தொல்லை: டான்ஸ் மாஸ்டருக்கு 20 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

திருச்சி சிந்தாமணி பகுதியில் நடனப் பயிற்சிக்கு சென்ற 6 வயது சிறுமிக்கு இ.பி.சாலை பகுதியைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் சரவணக்குமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து, கடந்த 31.5.2019 அன்று கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வத்சன், குற்றம்சாட்டப்பட்ட சரவணக்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3,0 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.

அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்குமாறும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கோட்டை மகளிர் போலீஸாரை காவல் ஆணையர் அ.அருண் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in