Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM

போதை பொருள் விற்ற 8 பேர் கைது :

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில், ஆம்பூர் வட்டத்தில் தனிப்படை காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக், மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த அன்பழகன்(38), மோகன் (42), நவநீதகிருஷ்ணன்(70), சகி(55), பீமராஜ்(69), ஏஜாஸ்(30), செல்வம்(40), கிருஷ்ணன்(65) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x