புதுவையில் 5 குழந்தைகள் உட்பட 86 பேருக்கு கரோனா :

புதுவையில்  5 குழந்தைகள் உட்பட 86 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

புதுச்சேரியில் புதிதாக 5 குழந்தைகள் உட்பட 86 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தொற்றுக்கு முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் 4,766 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 61, காரைக்கால் - 16, ஏனாம் - 1, மாஹே - 8 பேர் என மொத்தம் 86 (1.80 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கதிர்காமம் அரசு மருத்து வமனையில் உள்ள குழந்தைகளுக்கான கோவிட் வார்டில் 5 குழந்தைகள் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட இரு தாய்மார்களுடன் இரு குழந்தை களும் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரைச் சேர்ந்த 59 வயது முதியவர் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 71 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 43 பேரும், கோவிட் கேர் சென்டரில் 25 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் 736 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 909 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in