‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ஆகிறது தோப்பூர் காசநோய் மருத்துவமனை :

‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ஆகிறது  தோப்பூர் காசநோய் மருத்துவமனை :
Updated on
1 min read

மதுரை அருகே உள்ள தோப்பூர் அரசு மருத்துவமனை, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத் துவமனையாக தரம் உயர்த்தப் படுகிறது.

தோப்பூர் காசநோய் மருத்து வமனையில் கரோனாவுக்கு முன்பு வரை காசநோய் மற்றும் காலராவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா பரவியதும், தோப்பூர் மருத்துவமனையும் கரோனா சிகிச்சை மை யமாக மாற்றப்பட்டது. ஆனால் அங்கு ஐசியு வார்டு, சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன கருவிகள் இன்றி உயிருக்குப் போராடும் நோயாளிகள், நோய் தீவிரமானோரை அனுமதிக்க முடியவில்லை. அதனால் நகரின் மையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றாக புறநகரில் தோப்பூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் தது. இந்நிலையில் அதற்கான வாய்ப்பு குறித்து ‘டீன்’ ரத்தினவேலு தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா உள்ளிட்ட அனைத்து உயர் மற்றும் தீவிர சிகிச்சைக்கும் நோயாளிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போக் குவரத்து நெரிசலைக் கடந்துவர வேண்டியுள்ளது.

மதுரைக்கு உள்ளூர் நோயா ளிகள் மட்டுமல்லாது ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத் துக்குடி மாவட்டங்களில் இருந்து கூட நோயாளிகள் வருகின்றனர்.

அதனால் அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு மாற்றாக தோப்பூர் அரசு மருத்துவமனையை சூப் பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்றத் திட்டமிடப்பட் டுள்ளது. அதற்காக அங்கு 100 சாதா ரண படுக்கைகள், 100 ஐசியு படுக்கைகள் கொண்ட ஹைடெக் வார்டுகள் அமைக்கப்படுகின்றன. அதற்காக கட்டிட வசதிகள் ஏற் கெனவே தயாராக உள்ளன.

மருத்துவ உபகரணங்களும், சிகிச்சை வழங்குவதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும்.

தற்போது இதற்காக திட்டம் தயார் செய்து ராஜாஜி மருத்துவமனை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் வழங்கியதும், தோப்பூர் அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக தரம் உயர்த்தும் பணி கள் தொடங்கிவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in