Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

அதிமுகவினரை அச்சப்படுத்தி முடக்கிவிட முடியாது : நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. பேச்சு

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுகவினரை அச்சப்படுத்தி முடக்கிவிட முடியாது என்று நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தேன்மொழி எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றியத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நத்தம் ஆர்.விசுவநாதன் பேசுகையில், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதிமுகவை களங்கப்படுத்தவேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் போடப்படுகிறது. அதிமுகவினரை மிரட்டினால் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என திமுக நினைக்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுகவினரை அச்சப்படுத்தி முடக்கிவிட முடியாது என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x