Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம் :

தேனி

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் நேதாஜி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதுமான தடுப்பூசி, நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காஸ் சிலிண்டர், அடுப்புக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x