பேக்கரியில் தீ ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம் :

பேக்கரியில்  தீ  ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம் :
Updated on
1 min read

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள பேக்கரியில் நேற்று காலை சமையல் காஸ் கசிந்து தீப்பற்றியது. காலை நேரம் என்பதால் குறைந்தளவே பணியாளர்கள் இருந்துள்ளனர். இருந்த 2 பணியாளர்களும் அங்கிருந்து தப்பி வெளியே வந்தனர். தீப்பற்றியதால் பேக்கரியில் இருந்த இயந் திரங்கள், குளிர்சாதன இயந்தி ரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின.

உடனடியாக பேக்கரி பணியாளர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரி வித்துள்ளார்.

தீயணைப்பு நிலையத்தி லிருந்து 10 நிமிடத்தில் வரக்கூடிய தீயணைப்பு வாகனம் அரை மணி நேரம் கழித்தே வந்துள்ளது. இதனால் அங்கி ருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன. இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கும் என பேக்கரி உரிமையாளர் தெரி வித்தார்.

இதுகுறித்து பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in