தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு இழப்பீடு :

தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு  ரூ.30 லட்சம் விபத்து காப்பீடு இழப்பீடு  :
Updated on
1 min read

பெரம்பலூர் செல்லியம்பாளையம் கிராமத்தில் 12.7.2020 அன்று கிணற்றில் சிக்கிய நபர்களைக் காப்பாற்ற முயன்ற போது, விஷ வாயு தாக்கி தீயணைப்பு வீரர் ராஜ்குமார் மரணமடைந்தார். இவர், ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்கு மூலம் விபத்துக் காப்பீடு செய்திருந்தார்.

இதையடுத்து, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விபத்துக் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை ராஜ்குமாரின் மனைவி உமா மற்றும் குடும்பத்தினரிடம் ஆட்சியர்  வெங்கட பிரியா, தீயணைப்புத் துறை மத்திய மண்டல துணை இயக்குநர் பி.சரவணகுமார், ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் வி.ஹேமா ஆகியோர் வழங்கினர். விபத்துக் காப்பீட்டின் மூலம் இழப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சம் பெற்று வழங்குவது தீயணைப்புத் துறையில் இதுவே முதன்முறையாகும்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் டி.அருள்ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ப.அம்பிகா, நிலைய அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in