Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
கலை இலக்கிய பெருமன்றத் தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் வைரவிழா ஆண்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகளை ஆகஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூம் செயலி வழியே போட்டி
ஆகஸ்ட் 15-ம் தேதி போட்டிகள் தொடங்கு கின்றன. அன்று, ‘மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல்' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடை பெறுகிறது. ஆகஸ்ட்15-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூம் செயலி வழியே போட்டி நடைபெறும்.
ஆகஸ்ட் 20-ம் தேதி கவிதை மற்றும் ஆய்வுக் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. ‘செந்தமிழ் நாடிது-எங்கள் செந்தமிழ் நாடிது' என்ற தலைப்பில் நடைபெறும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் தட்டச்சு செய்யப்பட்டால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கையால் எழுதப்பட்டால் 12 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். ‘தமிழ் எங்கள் உரிமை' என்ற தலைப்பில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகளை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 97151 85309 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT