Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

கிணற்றில் இருந்து தொழிலாளி உடல் மீட்பு :

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த கூலி தொழி லாளியின் உடலை காவல் துறையினர் நேற்று மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த கட்டேரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஜோலார் பேட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவீந்திரன்(42). என்பது தெரியவந்தது. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேலும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x