புதிதாக 120 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 120 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 47,827-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு இதுவரை 1,092 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியான நிலையில், 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 312 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,612-ஆக உயர்ந்துள்ளது. 50,171 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in